Monday, October 17, 2011

தம்பி செல்லம் மறைந்த நாளில் தினேஷ் எழுதிய வரிகள்

தினேஷின் Diary ல் இருந்த ஒரு கவிதையைப் படித்தேன்.அது கடுக்கரை தம்பி
செல்லம் பற்றியது.ஆச்சரியமாய் இருந்தது.என் விழியோரம் நீர் தழும்பியது.
என் தம்பியின் நினைவினில் பல காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது...

ஒருநாள் நான் அவன் திருவனந்தபுரத்தில் இருந்த போது அவனுடன் Nair Union Hostel -ல் தங்கினேன்.University College-ல் எனக்கு Exam- அதுக்கு படித்துக் கொண்டிருக்கும் போது வெளியே நல்ல மழை.current இல்லை.வெளியிலும் ஒரே இருட்டு. என் தம்பியோ வேறு ஒரு அறையில் இருந்தான்.நான் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும்போது ஜன்னல் வெளியெ ”எண்ணே எண்ணே” என அவன் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால் 6 மெழுகுத்திரியுடன் மழையில் கொட்டக் கொட்ட நனைந்து கொண்டே நின்றிருந்தான்.Flask-ல் tea யும் தந்தான்.மெழுகுத்திரி வெளிச்சத்தில் தான் நான் படித்தேன்.

கடுக்கரையில் திரு முருக பக்தர்கள் சங்கம் நான் ஆரம்பித்தபோது அவனால் தான் அது சிறப்பாக நடந்தது. என் வீட்டு என் அறைதான் அவனுக்கும் அவன் நணபர்களுக்கும் அலுவலகம். அவனைப் பற்றி எழுத நிறைய விசயங்கள் உண்டு.

தினெஷ் திட்டுவிளை கரோல் ஸ்கூலில் படிக்கும்போது அவன் Tour போனான்.ஒரு நாள் திருவனந்தபுரம் காலையில் போய் மாலை வரணும். இரவு 8 மணி வரை பள்ளி வேன் வரவில்லை. எஙகள் படபடப்பு அதிகமானது..Railway Station- ல் போன் மூலம் கேட்டதில் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிப் பிள்ளைகளுடன் வந்ததை அறிந்து கொண்டோம்.மினிக் கிளப்பில் இருந்த செல்லமும் கிருஷ்ணனும் சுவேகாவில் திட்டுவிளை நோக்கி போனாரகள்.
அங்கு தினேஷைக் கண்ட உடன் எங்களுக்கு தகவல் தந்தான். டூருக்கு கூட்டிற்றுப் போன ஆசிரியரைக் கண்டித்தான்........

அவன் மறைந்தது எனக்கு பேரிழப்பே.

அவனைப் பற்றி தினேஷ் எழுதிய வரிகள்:-



மே தினம் 2008-ல் ஏந்தான் வந்ததோ அன்றுதான்
சேதி ஒன்று இடிபோல் காதில் வந்து விழுந்தது
என்னையும் தன்மகன்போல் நேசித்த என்னன்பு
சின்னப்பாவின் இதயத்துடிப்பு நின்ற தினம் அன்றுதான்.
என்னப்பாவின் தம்பியில்லாக் குறையை தீர்த்த செல்ல
சின்னப்பா இனி இல்லை இவ்வுலகிலே...
போதையிலும் தடுமாறாமல் பாதை மாறா சின்னப்பா
இன்று மட்டும் பாதை மாறிப் போனதேனோ
எல்லோரும் அவருடல் அருகே அழுது கொண்டிருக்க
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் ஒற்றை மரமாய்
விம்மி விம்மி அழுகின்றேன்....என் கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு முகம் தெரிகிறது....அது
பாசமுள்ள சின்னப்பாவின் சிரித்த முகம்.அந்த முகமே
இனி என்றும் என் மனதில் இருக்கும்...

No comments:

Post a Comment