Saturday, October 8, 2011

இந்தியர்களை சந்தித்ததில் அறிந்த சில உண்மை நிலை

காலையில் எப்பவும்போல முகம் கழுவ டேப்பைத் திறந்தேன்.சூடாக இருக்கும் தண்ணீர் இன்று சுடவில்லை.என்னடா இது நேத்துவரை கொதிக்கும் நீர் வந்தது.இன்று அப்படியில்லையே..... ஆம் க்ளைமட் மாறுகிறது...வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி டிசம்பர்-ஜனுவரியில் குளிர் பயங்கரமாக இருக்கும்.

காலை 10 மணிக்கு ground floor-ல் போய் அங்கு கிடந்த செயரில் இருந்தேன்.இதமான காற்று தழுவிக் கொண்டே இருந்தது.அது சுகமாகவும் இருந்தது.சாதாரணமாக அந்த இடத்தில் சூடான காற்று வீசுவதால் அதிக நேரம் நிக்க முடியாது.சலீம்....அவன் இந்தியாவில் பாலக்காடு-ன் பக்கத்தில் உள்ள ஊரில் இருந்து அந்த பில்டிங்கின் ஹரீஸ்-ஆக வேலை பார்ப்பவன்....சொன்னான்.வெயில் காலத்தில் AC room,வீட்டில் போய் இருந்து கொண்டு நாம் சமாளிக்கலாம். ஆனால் ஜனுவரியில் குளிர் காலத்தில் வெளியே வீசும் தணுத்த காற்றை தாங்குவதற்கு ரெம்ப கஷ்டமாய் இருக்கும்.

சலீமிடம் தினமும் பேசி காலை நேரத்தை களித்துக் கொண்டிருந்தேன்....

நாங்கள் இருக்கும் பகுதியில் அடுத்தடுத்து 11 பில்டிங்க் இருந்தன.ஒரு வரிசையில் 6-ம் அதற்கு இணையாக 5-ம்.....கீழ்த்தளம் white tiles போடப்பட்டு ஒரு நீண்ட மைதானம் போல் நடப்பதற்கும் சிறுவர்,சிறுமிகள் விளையாடுவதற்கும் வசதியாக இருந்தது...ஒவ்வொரு கட்டிடத்துக்கும் 9 தளங்கள்.ஒரு தளத்தில் 4 வீடுகள்.

grund floor-கீழும் பெரிய godown இருந்தன.11 பில்டிங்குக்கும் ஒரே ஓணர்...மாத வருமானம் ஒண்ணே கால் கோடி ருபாய்க்கும் மேலே. இது போல் அவருக்கு பல இடங்களில் இருக்கிறது.

அவனதுஅக்காளும் அத்தானும் சால்மியாவில் ஒரு ஹோட்டல் நடத்துகிறார்களாம்.இரண்டு வருசத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போவானாம். போகும் போதெல்லாம் திரும்பி வர வேண்டாம் என் நினைத்துத்தான் போவான்.ஆனால் ஊரில் தெண்டிப் பிழைப்பதை விட ஜீவிக்கான் வேண்டி இங்கு இருப்பதுதான் நல்லது என்கிறான்.

என் பேரனுடன் நானும் என் மனைவியும் ஒருநாள் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு கேரளப்பெண் எங்களிடம் வந்து,“ குப்பூஸ் கடை எங்கே இருக்கிறது ” என கேட்டாள்.அந்தக் கட்டிடத்தில் இருப்பவர்கள் எல்லோருமே புதுசுதான்.தெரியாது என்று சொன்னோம்.

அவள் சொன்ன அவளது கதை..... “ஊர் கோட்டயம் ,கணவர் கார் ட்ரைவர்,2 பெண் குட்டிகள்.மூத்த குட்டி B.Sc Nursing படிச்சிருக்கா..அவள் தையல் கடை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தாள்.குவைத்தில் வந்தால் நல்ல சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இருந்த தையல் மெசின்களையும் விற்று வந்தாள்.அவள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை...ஒரு தையல் கடையில் வேலை பார்க்கிறாள்...வாடகைக்கும்,சாப்பாட்டுக்குமே சரியா இருக்கு....ஊருக்குப் போனால் அங்கும் தொழில் பண்ண முடியாத நிலை..... நர்ஸிங்க் படித்த மகளை வேலைக்கு சேக்கணுமானால் ஒரு வருட அனுபமாவது வேணும்....எல்லாம் அந்தத் தம்புரான் தான் வழி காட்டணும்” என்று கூறினாள்.

இங்கே இருக்கும் ஒவ்வொரு வெளி நாட்டினரிடமும் ஒரு கதை இருக்கிறது.

Coolpex -ஐ புதிய வீட்டில் வைக்க ஒருவன் வந்தான்.பழைய வீட்டில் இருந்து அதை எடுத்து புதிய வீட்டுக்குக் கொண்டு வந்து வைக்க அவனுடன் நானும் அவன் ஓட்டிய மினி வேனில் வந்தேன்.அவன் பெயர் அப்துல் முகம்மது...கேரளம்...அவன் தனிஒருவனாக எல்லாவேலையயும் நேர்த்தியாக செய்து முடித்த பாங்கு என்னை வெகுவாக கவர்ந்தது.வேலை முடிந்ததும் காசு கேப்பானே என நினைத்துக் கொண்டே அவனுடன் பேசினேன்.அவன் சொன்னது.

6 வருடத்துக்கும் மேல் ஆகி விட்டது குவைத்துக்கு வந்து....என்ன வாழ்க்கை இது.... இந்த வேலை செய்ய நம்ம ஊருண்ணா 3 ஆள் வேணும். பாருங்கோ....ஹெல்ப்பரும் நானே. ட்ரைவரும் நானே.....இந்த வேலை முடிந்து 30 கிலோ மீட்டர் தூரம் போய் புதிய ஒண்ணு ஃபிட் செய்யணும். சாப்பாடும்,தங்கும் இடமும் நான் தான் பாக்கணும்.இந்த டிசம்பரில் முடிச்சுட்டு போயிருவேன்....சம்பாதிக்கவே இல்லேண்ணு சொல்ல மாட்டேன்...பாரியா....குட்டி எல்லாம் அங்கே.....அவங்களும் இங்கே இருந்தாலும் பரவாஇல்ல....

வேலை முடிந்தது. காசு பற்றிக் கேட்டேன்.replacement-க்கு காசு வாங்குவதில்லை என்றான்.

வீட்டின் கதவை பூட்டி விட்டு அவனிடம் விடைபெற்றுச் செல்ல முற்பட்டபோது அவன்,“ இந்த வெயிலில் எப்படி போவீங்க...நானே கொண்டு விடுகிறேன் எனச் சொல்லி பழைய வீட்டினருகே என்னை விட்டு விட்டுப் போனான்.

வாழ்க்கை வாழ்வதற்குத் தானே.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.எல்லோருமே ஒன்று போல் நினைப்பதில்லை.

No comments:

Post a Comment