Monday, October 24, 2011

விருந்தோம்பல்

குமரிக்கடலில் முங்கி பேசுவதை குவைத் கடலில் இந்தியர்கள் குளிக்கும்போது கேட்கும் காலம் ஒன்று வரும். நிலத்தால் பிரிக்கப்பட்டாலும் நீரால் குமரிக்கடல் நீரும் குவைத்துக் கடல் நீரும் ஒன்றே. தமிழனின் பாரம்பரிய கலாச்சாரம் இங்குளோர் கையில் பத்திரமாக இருக்கிறது.வேற்றுமையிலும் ஒற்றுமை உண்மையாய் இருப்பது இந்தியாவில் இல்லை என்பது தான் நிதர்சனமாய் இருந்தாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியரகள் ஒற்றுமையாய் வாழ்கிறார்கள்.வாய்ச் சொல் வீரர்கள் இங்கு செயல்வீரர்களாய் வாழ்கிறார்கள்.

குவைத்தில் வேலை பார்ப்பவர்கள் வீட்டை, நாட்டை பிரிந்து பல மைல்களுக்கு அப்பால் இருப்பதால் சம்பாதிப்பதை செலவே செய்யாமல் மிச்சப்படுத்தி Bank-ல் போட்டு பாஸ்புக்கை மாத்திரமே படித்துப் பார்த்து மகிழ்வார்கள் என நினைத்தேன்.இங்கு வந்து பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள்.

குவைத்தின் ஒரு ருபாய் கொடுத்து எதையாவது வாங்கும்போது அய்யய்யொ... இது 180 ருபாயா வேண்டாமே என் என் மனம் துடிக்கும்....எனக்கு குடிக்க காப்பி, டீ வேணுமான்ணு கேட்டால் மனதில் நம்ம ருபாயை நினத்துப் பாத்து வேண்டாம்னுதான் சொல்லிக் கிட்டிருந்தேன். தினேஷ் என்னிடம்,“ அப்பா என் நண்பர்கள் உங்களை அவங்க வீட்டுக்கு கூட்டிற்று வரச் சொன்னாரகள்....வருவீங்களா” கேட்டான். நான், “ அதெல்லாம் எதுக்கு....அவங்களுக்கு எதுக்கு கஷ்டம்”
என்றேன்.

நாட்கள் சென்றன.

நானே எனது மகனிடம் Casio watch வேணும் விலை 3 கே.டி தான் எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

தமிழர்களின் கலாச்சாரமான விருந்தோம்பலை விடாமல் பாதுகாத்து வருகிறார்கள் இங்கு வாழும் நம்மவர்கள். பழைய தமிழ் இலக்கியங்கள் பல தமிழர்களின் விருந்தோம்பலைப் பற்றிக் கூறி இருக்கிறது.

நம் கவி வள்ளுவன் ,“ இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” கூறி இருக்கிறார்.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் விருந்தோம்பலுக்கு என ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணப்படி பார்த்தால் விருந்து என்றால் புதியவர் என பொருள். முன்னாளில் முன்னால் தெரியாதவர்களையே விருந்தினர் என்று சொல்வார்கள். ஆனால் இன்று நாம் யாரை விருந்தினர் என்று சொல்கிறோம்.வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்களை, நண்பர்களையே
விருந்தினர் என்கிறோம்.

விருந்தோம்பலை வளர்த்து நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பது நல்லதே.

திருமணம் தவிர்த்து எல்லா நிகழ்ச்சிகளும் பிறந்த நாள் விழா,நாட்டிய அரங்கேற்றம்,திறப்புவிழா,கலாச்சார நிகழ்வுகள் என குவைத்தில் நடந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.

நாம் இருக்குமிடம் எதுவோ அதுவே இல்லம் என்கிறபோது ஆனந்தம் பொங்குமே.

அன்பாக எங்களை அழைத்து விருந்தளித்தவர் வெங்கட்ராமன் போற்றி.
வந்த நாளில் ஓணச்சாப்பாடு அவருடைய ஹோட்டலில்......

தூத்துக்குடி சிவராமன் வீட்டிற்குப் போனோம்.அவர்கள் அனைவரும் எங்களுக்கு புதியவர்கள். நானும் என் மனைவியும் புதியவர்கள்.அன்பாக அளித்த விருந்தினை ருசித்தோம்.அவரது Laptop-ல் internet வசதி இருந்தது.அதனை நான் பயன் படுத்தி LIC premium கட்டினேன். வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பினார்கள்.

தோவாளை மகாதேவன்,புத்தேரி பிள்ளை, ஆஸ்ராமம் மாதவன் எல்லோருமே ஒரு VIP treatment-டன் விருந்தளித்து கௌரவித்தார்கள்.

வீட்டிற்குப் போன உடன் எல்லோருமே முதலில் தந்தது தன்ணீர்.

குவைத்தியர்கள் முதலில் விழாவில் கொடுப்பது Black Tea.அதை மறுக்காமல் வாங்கி குடிக்கணும்.மறுத்தால் அது அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

விருந்தோம்பலுக்கு 9 இலக்கணம் உண்டு. விருந்தினரை நாம் நம் வீட்டுக்கு வந்த உடன், அவரது வரவைப்பற்றி வியந்து பேசணும். நல்ல சொற்களைக் கூறுதல், இனிமையாக எடுத்துக் கூறுதல், விருப்பத்துடன் பார்த்தல், வருக வருக என வரவேற்றல், அவரைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்தல், அவர் எதிரே நின்று மகிழ்ச்சியான செய்திகளைக் கூறுதல், வந்தவருடன் அன்புடன் அருகே அமர்ந்து பேசுதல், விருந்துண்ட பின் அவர் போய்வருகிறேன் என்றவுடன் அவருடன் வாசல் வரை சென்று வழிஅனுப்பிவிட்டு வருதல் ஆகிய ஒன்பது வகைச் செயல்கள் விருந்தோம்பலின் இலக்கணம் ஆகும்.

விருந்தோம்பலின் இலக்கணம் வாசல் வரை வந்து வழி அனுப்புவது தான்.ஆனால் இவர்களோ எங்களை தங்கள் காரில் அழைத்து வந்து பழையபடி வீட்டில் கொண்டுவந்து விட்டார்கள்.கலாச்சாரம் இங்கு பத்திரமாய் பேணப்படுகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

குவைத்தை விட்டுப் போகும்போது பசுமையான இந்த நினைவுகளோடு நாங்கள் செல்வோம்.

செல்விருந்து நோக்கி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.......

பசித்தவனுக்கும் விருந்தளித்திடுவோம் அவசியம் நேரும் போது.

No comments:

Post a Comment