Wednesday, October 12, 2011

கதையாசிரியரே கையெழுத்திட்ட கதை யொன்று படித்தேன்

குவைத்துக்கு வந்து எல்லா இடங்களையும் பாத்தாச்சு. நேரம் போக எதையாவது படிக்கலாமே. தோவாளை மகாதேவன் தந்த ஒரு புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.அதன் முதல் பக்கத்தில் ஆசிரியரின் கையெழுத்தும் ஒப்பும் இருந்தது.

எட்டுத்திக்கும் மதயானை கதை. நாஞ்சில் நாடன் எழுதியது.

படித்தேன்.செண்பகம் கதாநாயகி. நாயகன் பூலிங்கம். பிறப்பால் வெவ்வேறு இனம். ஊரில் இருந்து அவன் விரட்டப்படுகிறான் .பல ஊர்களில் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளை செய்து கிடைத்த பணத்தை வீட்டுக்கு அனுப்புகிறான்.பல காரணங்களால் ஒவ்வொரு ஊரிலும் அதிக நாள் தங்க முடியாமல் கடைசியில் பம்பாய்க்கு வந்து சட்டம்பி ஆகிறான்.

செண்பகத்தை ஒரு நாள் சந்திக்கிறான்.அவள் ஆண்மையில்லா ஒருவனுடன் திருமணமான கதையை அறிகிறான். இருவரும் அங்கிருந்து வேறெங்கோ செல்கிறார்கள்.

சுசீலா அவனைவிட மூத்தவள். ஊரில் இருக்கும்போதுள்ள தொடர்பால் இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. கோமதியும் அவனை விட மூத்தவள்.இருவருக்கும் உள்ள தொடர்பால் பிரிய நேரும்போது அவன் அவளை தன்னுடன் வரும்படி அழைக்கிறான்.பானுமதி என்ற ஒருத்தியும் வருகிறாள். அவளும் மூத்தவளே...

மூத்தபெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கும் பல கிராமத்து இளைஞர்களின் கதையினை அறிந்து மிக மிக ஆச்சரியப்பட்டதால் இந்தக் கதையை படிக்கும்போது அந்தக் கதையின் நாயகனின் அனுபவம் எதுவுமே அருவருப்பாக தோணவில்லை. திக்கெட்டும் சென்றாலும் விரட்டுவது மதம்பிடித்த மனமென்ற மதயானைதானோ.......ரசிக்கும்படியான கதை.ஒரு திரைப்படத்துக்கான கதையாகவும் இருந்தது

No comments:

Post a Comment