Thursday, October 13, 2011

ஒரு நிமிடக் கதை

கடுக்கரையின் பக்கத்து ஊர் திடல்.அது ஒரு கிராமம்.அங்குள்ள அனைவரும் ஒரெ இனத்தவர்கள் தான்.விரல் விட்டு எண்ணும்படியாக ஒரு சிலர் சற்று வசதி படைத்தவர்கள்.மனிதர்கள் கூடி வாழ்ந்தாலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது.

ஒரு சிறிய பொறி பெரிதாய் மாறி ஒருவனை ஒருவன் வெட்டினான். வெட்டியவனை நீதிமன்றம் விடுதலை செய்தது. இறந்தவனின் தூரத்து
உறவினர்கள் காத்திருந்து வெட்டியவனை ஒருநாள் கொன்று விட்டார்கள். இது ஒரு சம்பவம்.

கடுக்கரையில் இரண்டு பேர் உறவினர்கள்.வண்ணான் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவனது தொழில் திருடுவதும் வழிப்பறி செய்வதும்.போலீஸ் அவனைப் பிடித்து தண்டித்தது. தான் போலீஸில் மாட்டியதற்குக் காரணம் அந்த உறவினர்கள் என நினைத்த வண்ணான் ஒரு நாள் அவர்களில் ஒருவரின் வைக்கப்படப்பில் தீ வைத்து விட்டான்...ஒரு வாரம் கழிந்து அடுத்தவரின் படப்பையும் கொழுத்திவிட்டான். இது வேறொரு சம்பவம்.

இவைகளில் முதல் சம்பவம் நடந்த காலம் படப்பு எரிந்த பின் நடந்தது. கொலைக்கேசுக்கான விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடந்தது.வக்கீலின் வாதத்தால் இவனும் வெளியே வந்துவிட்டான்.வந்தவன் ஊரை விட்டே போய் எங்கோ போய் வாழ்ந்தான். இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் வைத்த வாதம் விசித்திரமாக இருந்தது.

இரண்டு உறவினர்களின் பெயர்கள்......அவர்கள் ஊரில் பெரிய பண்ணையார்கள்.அந்தப் பண்ணையார் இருவருக்குமே கிழக்குச்சானல் பக்கம் தென்னந்தோப்பும் பனைவிளையும் உண்டு.
பனைகளில் பதனீரை இறக்கி காய்ச்சி கருப்பட்டியாக்கி விற்றால் வருமானம் வரும். பனையேறுபவர்கள் அனைவருமே திடலில் வாழும் நாடார்கள் தான். அவர்கள் பாட்டமாக ஒரு வருஷத்துக்கு இத்தனை றாத்தல் கருப்பட்டி கொடுக்கணும். வருடம் தோறும் விட்டு வாடகை கூடுவது போல பாட்டமும் கூடும்.

பனையேறுபவர்களில் சிலர் பாட்ட கருப்பட்டிக்கு தேவையான பதனீரை மாத்திரம் காய்ச்சி மீதியை கள்ளுக்காக பாதுகாப்பாக வைத்து தானும் குடித்து குடிப்பவர்களுக்கும் விற்று அதிக வருமானத்தை ஈட்டினர்.

பண்ணையார்களின் பனைவிளையிலும் சாமுவும் ஞானமும் பனையேறினர்.

ஒருதடவை கள் இல்லையென்று சொன்னதால் கோபப்பட்டு வாக்குவாதம் நடந்தது.குடிக்க வந்தவன் வசதி படைத்தவன். அவனும் திடல் ஊரில் வசிப்பவன்.

வாக்குச்சண்டைக்கு அடுத்த நாள் விளைக்குப் போன போது தன் குடில் பிய்ந்துபோய் கிடப்பதைக் கண்டு சாமுவுக்கு மிகவும் கோபம் வந்தது. இதைச் செய்தவன் அவனாகத்தான் இருக்கும்....பணத்திமிர்.அவனை விடவே கூடாது. காத்திருந்தான் அவனை தீர்க்க....

ஒருநாள் ஒரு குளக்கரையில் வெட்டுப்பட்டு இறந்து கிடந்தான்....அவனைக் கொன்றவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தான். செத்தவனுக்கு ஊரில் செல்வாக்கு கிடையவே கிடையாது....இருந்தாலும் அவனது தம்பி மார்கள் இருவருக்கு ரோசம் வந்து பழி வாங்கத் துடித்தனர்....அவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல.

ஒரு மாலைப் பொழுது தனியாய் வயல் வரப்பில் சென்று கொண்டிருந்தவனை உயிர் போவதுவரை வெட்டிக் கொன்றார்கள் அந்தச் சகோதரர்கள்.

இந்தச் சகொதரர்களுக்கு வேண்டி பிரபல வக்கீல் கோர்ட்டில் வாதாடினார்.

வக்கீல் வாதாடிய போது கோர்ட்டில் சொன்னது:-

இரண்டு பணக்காரர்களின் ஒருவரின் பண்ணையில் வேலை செய்பவன் தான் குற்றம் சாட்டப்பட்டுள்ள ..... பண்ணையார்கள் இருவரும் விரோதிகள்.இவர்களுக்குள் எப்போதுமே சண்டை.இருவரும் மாறி மாறி படப்பை தீ வைத்து நாசப்படுத்தினர்.

இந்தச் சண்டை வேலைக்காரர்களின் சண்டையாக மாறி பகை மூண்டது. தன்னைக் கொல்வதற்காக வந்தவனின் வெட்டுக்கத்தியை பறித்துதான் தன்னைப் பாதுகாக்கவே வெட்டினான்......

No comments:

Post a Comment