Monday, June 25, 2012

துண்டுப் பிரசுரத்தில் படித்தது.

என் வீட்டில் யாரும் படிக்காமல் போன ஒரு சின்ன பிரசுரம் என் கண்ணில் பட்ட்து படித்தேன். பிடித்திருந்தது. அதனை அப்படியே எழுதுகிறேன்.
ஹிந்து மதம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸநாதன தர்மத்தில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை என்று ரிஷிகளும் முனிவர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரேயே மந்திர ரூபமாக சொல்லியிருக்கிறார்கள்.
காலதேச வர்த்தமானத்தை ஒட்டியும் குல அறத்தை அனுசரித்தும் குறைந்தது நாற்பது ஸம்ஸ்காரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன நாம் செய்யும் கர்மாவினால் நமது உடல் புனிதப்பட்டு ஆத்ம ஞானத்திற்கு உரியதாக ஆகுமாயின் அந்த கர்மாவை ஸம்ஸ்காரம் என்று சொல்ல்லாம்.
 நாற்பது தெய்வீக கர்மாக்களில் விவாஹம் செய்து கொள்வது என்பது முக்கியமான ஒன்றாகும். வெறும் புலன் இன்பத்திற்கும், லௌகீக சௌக்கியங்களுக்கும் மட்டுமல்லாது மனிதராய்ப் பிறவியெடுத்த பயனை அடைவதற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகளாக கர்பதானம் ,சீமந்தம், குழந்தைக்கு பெய்ர் சூட்டுதல்,வித்யாரம்பம் போன்ற பல சம்ஸ்காரங்களுக்கும் திருமணம் தான் அடிப்படை என்பது சொல்லாமலேயே விளங்கும்.
வி-வாஹம் என்ற சொல்லிற்கு சிறப்பாக வளர்வது என்று பொருள். மனைவி என்பவள் புருஷனில் பாதி(அர்த்தநாரி) கணவனுடைய மிக நெருங்கிய சிநேகிதி.
தருமம்  செய்வது, பொருள் ஈட்டுவது, மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவற்றிற்கு அவளே ஆதாரம்.
பத்நியின் கர்ப்பத்தில் இருந்து பிறக்கும் குழந்தையைப் புத்ரன் அல்லது புத்ரி என்று சொல்கிறோம். ஆகவே அத்தகைய குழந்தையைப் பெற்றவளை தாயைப்போல் பாவிக்க வேண்டும்.
இந்த் துண்டு பிரசுரமான  இடம் ஒரு திருமண மண்டபம் 2010 மே மாதம் 23-ஆம் தேதி.

No comments:

Post a Comment