Friday, February 3, 2012

செல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடுக்கரையில் மூன்று நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாகி விட்டன.கும்பாபிசேக விழாவிற்கு வந்த பலரை, நான் பல வருடங்களுக்குப் பின் பார்த்துப் பேசியது அதிக மகிழ்ச்சியைத் தந்தது.


வேர்களை மறவா கடுக்கரை ஊர் அன்பர்கள் பலரைப் பார்த்தேன். கும்பாபிசேகம் காண்பதற்கென்றே வந்தவர்கள் சிலரையும் பார்த்தேன்.என்னைத் தெரியுமா என நான் கேட்க ,ஒரு இளைஞர் உங்கள் முகத்தினை ஃபேஸ்புக்கில் பாத்திருக்கேன் எனச்சொன்னது சற்று வித்தியாசமானதாகவும் சந்தோசமாகவும் இருந்தது.


கும்பாபிஷேகம் காண வந்த பலர்,கோவில் திருப்பணிக்கு மனமுவந்து நிதிதனை கொடுத்ததைக் கண்டேன்..


கோவிலின் தெற்குப் பக்கம் உள்ள தெருக்களில் வண்ணமிகு கோலங்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னே காணப்பட்டன.இரு வாசல்களில் வாழைமரங்கள், உலத்தி இலை, கட்டப்பட்டும் மின் ஒளி பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருந்தது.


முதல் நாள் யாகசாலை பூஜை ஆரம்பமானது.கும்பாபிஷெகத்தை நடத்தி வைக்க திருநெல்வேலியில் இருந்து திரு.கே.ராஜகோபால தீட்சிதர் அவருடைய குழுவினருடன் வந்தார்.முதல் நாள் மதியம் ஆயினூட்டு தம்பிரான்கோவில் பாயசம் வைப்பு அடியந்திரம் நல்லபடியாக நடந்தது. மாலை 5.30 க்கு மேல் கோவில்குளத்தில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்து ஊர் சுற்றி கோவிலுக்கு வந்தனர். யானையின் மீது திருப்பணிக்குழு தலைவர் திரு. காந்தியும் ஒரு தீட்சிதருடன் அமர்ந்திருந்தார். நான் ஒவ்வொரு இடத்திலும் முன்னதாகப் போய் வீடியோ படம் எடுத்தேன்.பின் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் மருந்து சாத்தும் பணி நடந்தது. ஊர்மக்கள்  அனைவரும் அதில் பங்கெடுத்தனர். மருந்தை  உலக்கையால் இடிக்க பெருங்கூட்டமாக வரிசையாக நின்றார்கள்.புதிய சிலைகள் நிறுவப்பட்டன. மூன்றாம் நாள் மகா கும்பாபிஷேகம் மிக அழகாக நடந்து முடிந்தது. 10.30 மணியளவில் அன்ன விருந்து நடந்தது. மிகப் பிரம்மாதமாக ஐந்து கூட்டுகளுடன் பருப்பு,சாம்பார்,ரசம்,மோர் (கட்டியான மோர்) சாப்பாடு மிகவும் ருசியாக இருந்தது.அதை விளம்பியவர்கள் மிக அருமையாகவும் பொறுமையாகவும் விளம்பினார்கள். அன்ன விருந்து உபயதாரர் ஆட்டோ மாராசனின் அக்காளைப் பார்த்து மனதாரப் பாராட்டினேன்.மிக நல்ல முறையில் எல்லாமே இனிதாக முடிந்தது.
இது போன்றதொரு விழா என்னறிவில் இது தான் முதல் தடவை

No comments:

Post a Comment