Wednesday, October 19, 2011

எனக்காக மட்டுமே எழுதுவதிலும் ஒரு சுகம் தெரிகிறது

என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்......
தங்கம்

12-10-2011 குமுதத்தில் படித்த ஒன்று பிடித்தது. அந்த வரி:-

”எது உங்களுக்கு உண்மையானசந்தோஷத்தைக் குடுக்குதோ,எதைச் செஞ்சா நீங்க நிறைவா செய்ய முடியுமோ அதைச் செய்ங்க..அதான் கீதையும் சொல்றது.எதைச்செஞ்சா நீங்க நிறைவா உணர முடியுமோ,எதை நீங்க முழுமையா ஈடுபட்டு செய்யமுடியுமோ அதை செய்ங்க.அதான் உங்க தன்னறம்” ஜெயித்த ஜெயமோகன் சொன்னது.

காலையில் நடக்கப் போகலாமா வாறியா வரல்லியா என என் மனைவியிடம் கேட்டேன். வீட்டில் AC குளிரில் இருந்துகிட்டே ஒரே குளிரா இருக்கு. நான் நடக்க வரல்ல.... ஐயோ! அதானே நான் வெளிலே வெயில்ல நடக்கப் போறேன். இவ்வாறு சொன்னதும் சிரித்துக் கொண்டே என் மனவி என்னுடன் நடக்க வந்தாள்.

இது குவைத்தில் மாத்திரமே ஏற்படக்கூடிய அனுபவம். நம்ம ஊரில் ‘வெளியில குளிரா இருக்கு நடக்க வரல்ல’என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.....

2 comments:

  1. SIR TODAY ONLY I HAD A CHANCE TO READ YOUR BLOGS.HOW NICE TO READ ALL YOUR EXPERIENCES.WITH A WRITING OF TYPICAL NANJIL TOUCH.AWAITING TO READ MORE OF YOUR SHARED EXPERIENCES

    ReplyDelete
    Replies
    1. Very happy to see the nice lines which is a tonic to a person like me.
      I sincerely thank you very much.The mistakes if anything found in the blog may please be recorded in the comment box

      Delete